சரசுபதி தாலாட்டு
☘முத்துச் சிலாப முதலாளி ஆனவரோ கொத்துமுங்கை ஆபரணம் கொடிவிருது பெற்றவரோ
☘மூலப்பொருள் கண்ட முதல் சாதி ஆனவரோ தாலம் பாலுண்டு தான் இருந்த மன்னவரோ
☘நடைக் காவணங்களிட்டு நல்லதீ வட்டியுடன் படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ
☘வெள்ளானை மேலே வீதிவலம் சுற்றிவந்து துள்ளாடி சிங்காசனம் வீற்று இருப்பவரோ
☘பூதமது பந்தம் பிடித்துமுன்னே தான்வரவே நாதம் இரட்டை ஊதி நாடாளும் மன்னவரோ.. தொடரும்..☘☘☘
நன்றி: இராஜபிரசாத் அய்யா, அ.உ.அ.சே.அ